சென்னை, மே. 17: தமிழகத்தில் உயர் கல்வித் துறையில் கடந்த இரு ஆண்டுகளில் பல்வேறு பணிகள் நடந்துள்ள போதிலும், இத் துறை மீது பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுமென்றே குற்றம் சொல்வதாக உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி கூறியுள்ளார்.
தமக்கு, ""கூட இருந்தே குழி பறிப்பவர்களின் தோழமைதான் கிடைத்திருக்கிறது'' என்று முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கைக்குப் பதில் அளித்த ராமதாஸ், குறைகளைச் சுட்டிக் காட்டினால் ""குழி பறிக்கிறோம்'' என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியிருந்தார். உயர் கல்வித் துறையில் கடந்த 2 ஆண்டுகளில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் அந்தக் குறைகளைச் சுட்டிக்காட்டக் கூடாதா என்று அந்த அறிக்கையில் ராமதாஸ் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்குப் பதில் அளித்துள்ள பொன்முடி, "ஒரு உருண்டை சோற்றில் பூசணிக் காயை மறைக்க முயற்சிப்பதாக' கூறியுள்ளார்.சட்ட சிக்கல்களைச் சமாளித்து தொழிற் கல் லூரி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை ரத்து செய்ததன் மூலம் கிராமப்புற மாணவர்கள் 43.9 விழுக்காடு அளவுக்குக் கூடுதலாகப் பயன் பெற்றது, சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களின் அளவை 50 விழுக்காட்டில் இருந்து 65 விழுக்காடாக உயர்த்தியதால் பல்லாயிரக்கணக் கான பேருக்கு பயன் கிடைத்தது ஆகியவற்றை பொன்முடி நினைவுபடுத்தியுள்ளார்.
மேட்டூர், குளித்தலை உள்ளிட்ட 6 இடங்களில் புதிதாக அரசுக் கல்லூரிகள் தொடக்கம், அரசுக் கல்லூரி மாணவர்களுக்குக் கல்விக் கடன் ரத்து, சுயநிதிப் பாடப் பிரிவுக்கான கட்டணம் குறைப்பு, அரசு பொறியியல் கல்லூரிக் கட்டணம் ரூ.12,550- ல் இருந்து ரூ.7,550 ஆகக் குறைப்பு போன்றவை ராமதாஸýக்குத் தெரியாதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.கடந்த ஆண்டு கல்லூரிக் கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட்டதால் 3.74 லட்சம் பேர் பயன் பெற்றனர்.இந்த ஆண்டு பாலிடெக்னிக்குகளுக்கும் இந்த உதவி வழங்கப்படுவதால் 25 ஆயிரம் பேர் பயன் பெறுவர்.
கெüரவ விரிவுரையாளர்கள் பணி நியமனம், அண்ணா பல்கலைக்கழகம் பரவலாக்கம், இந்த ஆண்டில் திண்டிவனம், அரியலூர் உள்ளிட்ட 6 பொறியியல் கல்லூரிகள் மூலம் 1440 பேர் பயன் பெறும் வாய்ப்பு ஆகியவற்றையும் பொன்முடி பட் டியலிட்டுள்ளார்.தமிழகத்தில் ஐந்து அரசுக் கல்லூரிகளைப் பல்க லைக்கழகமாக மாற்றும் திட்டத்தை விட்டுவிட்டு, இரண்டு தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக் குவதில் அவசரம் காட்டுவதாக ராமதாஸ் கூறியுள் ளார். அதில் 4 கல்லூரிகள் ஒருமைப் பல்கலைக்கழ கமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டு நடவ டிக்கைகளும் எடுக்கப்படுகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக "கல்வியியல் பல்கலைக்கழகம்' தொடங்கப்பட்டிருக்கிறது.இந்தப் பல்கலைக்கழகங்கள் குறித்து சில சங்கங் களும் அரசியல் கட்சிகளும் கருத்துகளைக் கூறி யுள்ளன.இவற்றுக்கு அரசின் நிதி வராது என்று சொல் வது தவறு. அரசின் நிதி நிறுத்தப்படாது. பல்க லைக்கழக மானியக் குழுவின் நிதியும் கிடைக்கும்.இதனால் மாணவர்களுக்கு ஆராய்ச்சி வாய்ப்பு பெருகும் என பொன்முடி தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைப்ப டியும், கல்வித் தரத்தை உயர்த்தவும், ஆசிரியர்கள் நிலையை மேம்படுத்தவும், தேசிய அறிவுசார் ஆணையக் கருத்தின்படியும் 7 புதிய பல்கலைக்ழகங் கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.இவற்றின் நிறைகுறைகளைப் பற்றி ஆர்வம் உடையவர்களுடனும் சட்டமன்ற ஆய்வுக் குழுவு டனும் அரசு விவாதித்து விரைவில் நடைமுறைப்ப டுத்த நடவடிக்கை எடுக்கும் என பொன்முடி கூறி யுள்ளார்.