கொலை முயற்சி உண்மையா? இல்லையா?
பா.ம.க. நிறுவனர் ராமதாஸும் முதல்வர் கருணா நிதியும் சொல்வதில் நியாயம் இருக்கிறதா? காடுவெட்டி குரு மத்திய அமைச்சரையும் சட்டமன்ற உறுப்பினரையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டிப் பேசியது உண்மைதான் என்று ராமதாஸும் முதல்வரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். அது தன்னுடைய தன்மானத்துக்கு இழுக்கு என்று முதல்வர் சொல்கிறார். குரு பேசியதில் தவறு இல்லை என்று ராமதாஸ் சொல்கிறார். ஒரு மந்திரியைக் கொல்வேன் என்று பேசுவது தப்பில்லை என்று சொல்வது நியாயமா என்பதற்கு அவர் பதில் சொல்லவே இல்லை. முடிந்து போன விஷயம் என்று சொல்கிறார்.பக்கத்து வீட்டுக்காரனை வெட்டுவேன் என்று சொன்னாலே போலீஸ் கைது செய்து பொளந்துடுவாங்க. மந்திரியை வெட்டுவேன் என்று சொன்னது தப்பில்லையாம். இது என்ன நியாயம்? ராமதாஸுக்கு தனி நீதியா? இதுதான் இந்த ஆட்சியில் இதுவரை நடந்ததா? அப்ப கூட்டணிக் கட்சிக்காரன் கொலை செய்தாலும் முதல்வர் கண்டுக்கமாட்டாரா?இப்பகூட இன்னும் குரு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கலை. சாமானியனுக்கு ஒரு நீதி ராமதாஸுக்கு ஒரு நீதியா?முதல்வரின் போலீஸ் துறையின் நடுவு நிலைமை லட்சணம் இதுதானா?இதை மக்கள் கண்டுகொள்ளக் கூடாது என்று முதல்வர் எதிர்பார்க்கிறாரா?
எல்லோருக்கும் சம நீதி கிடைக்காதா?இதுவே அந்தம்மா ஆட்சியா இருந்தா எவனாவது இப்படி பேசிட்டு தப்பிக்க முடியுமா? போலீஸ் துறை இனியாவது நடவடிக்கை எடுக்குமா?