சென்னை, மே. 17: ராஜீவ் காந்தி நினைவு தினத்தன்று ரத்த தானம் செய்வதற்கு ஆள் கிடைக்காமல் போய்விடுமோ என்று காங்கிரஸ் கட்சியினர் அச்சப்ப டும் நிலை உருவாகிவிட்டது. அதனால் ஆள் பிடிக்கும் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் 21-ஆம் தேதி ராஜீவ் காந் தியின் நினைவு நாள் வருகிறது. அதற் காக மாநிலம் முழுக்க ரத்த தானம், ஏழைகளுக்கு உதவிகள் வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளுக்குக் காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடுகள் செய்து வரு கின்றனர்.வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராயபுரம் ஆர். மனோ தலைமையில் நடக்க உள்ள ரத்த தான நிகழ்ச்சியை மத்திய இணை அமைச்சர் ஜி.கே. வாசன் தண் டையார்பேட்டையில் தொடக்கி வைக் கிறார்.
அதற்காக ஒட்டப்பட்டுள்ள சுவ ரொட்டிகளில் (படம்) 10 பேரை ரத்த தானத்துக்கு அழைத்து வந்தால் ஒரு கிராம் தங்க நாணயமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்றும் அச்சிடப்பட்டுள்ளது.தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திர மாகத் திகழ்ந்தவர் ராஜீவ் காந்தி. இப் போது அவருடைய குடும்பத்தினரின் பெயரைச் சொல்லித்தான் காங்கிரஸ் கட்சியினர் அரசியல் நடத்த வேண்டியி ருக்கிறது.
சொந்த செல்வாக்கில் அரசி யல் நடத்தும் காங்கிரஸ் தலைவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.ராஜீவ் நினைவு நாளில் நிறைய பேரை வரவழைத்து ரத்த தானம் செய் தோம் என்று மேலிடத்தில் கூறி, இப் போதைக்குப் பாராட்டையும், எதிர்கா லத்தில் "வேறு ஆதாயங்களையும்' பெறும் நோக்கில், அதிகமான பேரை அழைத்து வருவதற்கு முயற்சி நடக்கி றது.10 பேரை அழைத்து வந்தால் தங்கக் காசு பரிசு தருவதாக வெளியாகியுள்ள அறிவிப்பு, காசு கொடுத்து ரத்தம் வாங் குவதைப் போல அமைந்துள்ளது என கட்சியினர் குமுறுகின்றனர்.
ராஜீவின் பெயருக்கு உள்ள செல் வாக்கை கொச்சைப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.இதேபோல வடசென்னை பகுதியில் காங்கிரஸ் கட்சியில் புதிதாக யாரும் செல்வாக்கு பெற்றுவிடக் கூடாது என் பதற்காக, காவல் துறையினர் உதவியு டன் குறிப்பிட்ட சிலர் மறைமுக செயல் களில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டப் படுகிறது.தன்னைத் தவிர வேறு யாருக்கும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தரக் கூடாது என்று காவல் துறை மூலம் சிலர் தடுப்பதாகவும் சொல்லப்படுகி றது. கட்சி வளர்ச்சிக்கு எதிரான இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என மேலிடத்துக்குக் கோரிக்கைகள் வைக் கப்பட்டுள்ளது என்றும் சொல்லப் படுகிறது.
0 comments:
Post a Comment