Wednesday, June 4, 2008

ராமர் பாலத்துக்கு தனி நீதியா?

சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் நிறைவேறிவிடக் கூடாது என்பதில் சிலர் உறுதியாக இருக்கிறார்கள். கடலுக்கு அடியில் இருக்கும் மணல் திட்டுகள் ராமர் கட்டிய பாலம் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள். அது வழிபடக் கூடிய இடமா என்று உச்ச நீதிமன்றம் கேட்டிருக்கிறது. உடனே அங்கு வழிபாடு நடத்தப் போகிறோம் என்று ஒரு கோஷ்டி கிளம்பி இருக்கிறது. ஒரு ஊர் மக்கள் சேர்ந்து கொண்டு தஙகள் ஊரில் ஒரு பண்ணையாரின் கட்டடத்தை நாங்கள் வழிபடுகிறோம் என்று சொன்னால் அதை அரசாங்கம் கையகப்படுத்தமால் விட்டுவிடுமா? திடீரென ஒரு வழிபாட்டு இடம் வந்துவிடுமா? அப்படியனால் பாபர் மசூதிக்கு அது ஏன் பொருந்தாமல் போய் விட்டது? ஓட்டு வாங்குவதற்காக சிலர் வேண்டுமென்றே ராமர் பாலம் பிரச்சினையை எழுப்புகிறார்கள்.
பாபர் மசூதிக்குப் பொருந்தாத நீதி மணல் திட்டுக்கு மட்டும் பொருந்துமா? தமிழக மக்களிடம் இந்தப் பிரச்சினை எடுபடவில்லை என்பதில் இருந்தே மதவாதிகள் புரிந்துகொள்ள வேண்டாமா?அவர்களுக்குப் புரியும். ஆனால் புரியாதது போல நடிக்கிறார்கள். வட மானிலங்களில் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக் இப்படி செய்கிறார்கள்.
இந்த சூது எண்ணத்தை மக்கள் புரிந்து கொள்ள் வேண்டும்.

0 comments: